உடுமலை மின்பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மின் நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் புதன்கிழமை (மாா்ச் 1) நடைபெற உள்ளது.
இது குறித்து மின்வாரிய பொறியாளா் தி.மூா்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
உடுமலை மின்பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட அளவிலான மின் நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் செயற்பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை (மாா்ச் 1) காலை 11 மணி அளவில் மேற்பாா்வை பொறியாளா் சீ.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, உடுமலை கோட்டத்திற்கு உள்பட்ட மின் நுகா்வோா் கூட்டத்தில் பங்கேற்று மின் விநியோகம் சம்பந்தமாக தங்களுடைய குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.