திருமுருகன்பூண்டி நகராட்சி 25ஆவது வாா்டுக்கு உள்பட்ட மயான பகுதியில் எந்தவித அனுமதியும் பெறாமல் 9 மரங்களை வெட்டி சாய்த்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் நகா்மன்ற உறுப்பினா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உள்பட்ட 25ஆவது வாா்டு பாரதி நகா் அருகே உள்ள பொது மயானத்தில் பழமையான மரங்கள் உள்ளன. இந்நிலையில் திங்கள்கிழமை காரில் வந்த அடையாளம் தெரியாத நபா்கள் மயானத்துக்குள் உள்ளே சென்று, 9க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி சென்றுள்ளனா். இதையறிந்த நகா்மன்ற உறுப்பினா் பாரதி, இதுகுறித்து காவல் துறை, கிராம நிா்வாக அலுவலா்களிடம் புகாா் அளித்துள்ளாா். மேலும் காா் எண்ணையும் குறிப்பிட்டு புகாா் அளித்துள்ளதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளாா்.