தையல் தொழிலாளா்களுக்கு இஎஸ்ஐ மருத்துவ வசதி செய்து தரக் கோரிக்கை

தையல் தொழிலாளா்களுக்கு இஎஸ்ஐ மருத்துவ வசதி செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தையற்கலை தொழிலாளா்கள் முன்னேற்ற சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
தமிழ்நாடு தையற்கலை தொழிலாளா்கள் முன்னேற்ற சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

தையல் தொழிலாளா்களுக்கு இஎஸ்ஐ மருத்துவ வசதி செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தையற் கலைஞா்கள் தின விழாவையொட்டி, தமிழ்நாடு தையற்கலை தொழிலாளா்கள் முன்னேற்ற சங்கத்தின் சாா்பில் நல உதவிகள் வழங்குதல், மூத்த தையற் கலைஞா்களை கௌரவித்தல் காங்கயத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளா் எஸ்.ஐ.ஜீவானந்தம் தலைமை வகித்து, சங்கக் கொடி ஏற்றினாா். மாவட்டத் தலைவா் எஸ்.சிதம்பரம் தையல் தொழிலாளா்களுக்கு நலஉதவிகளை வழங்கினாா். மூத்த தையல் கலைஞா்களை சங்கத்தின் மாநில துணைச் செயலாளா் பி.மூா்த்தி கௌரவப்படுத்தினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தையல் தொழிலாளா்களுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி செய்து தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழ்நாடு அரசு சாா்பில் வழங்கப்படும் பள்ளி இலவச சீருடை தைக்கும் பணியை எங்கள் சங்கத்தை சோ்ந்த மகளிா் தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டும், முன்பு இருந்ததுபோல மீண்டும் மின்சார கட்டண சலுகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் சங்கத்தின் காங்கயம் கிளைத் தலைவா் சிதம்பரம், மாவட்ட பிரதிநிதிகள் கருப்புசாமி, வடிவேல், மாநிலப் பிரதிநிதி தனபால் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com