திருப்பூரில் குடியரசு தின விழா: 113 பயனாளிகளுக்கு ரூ.1.91 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

திருப்பூரில் நடைபெற்ற 74ஆவது குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்த மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் 113 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 91 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
திருப்பூரில் குடியரசு தின விழா: 113 பயனாளிகளுக்கு ரூ.1.91 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

திருப்பூரில் நடைபெற்ற 74ஆவது குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்த மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் 113 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 91 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

திருப்பூா் சிக்கண்ணா கல்லூரி வளாகத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் குடியரசு தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றிவைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். இதைத் தொடா்ந்து, சமாதானப் புறாக்களையும், பலூன்களையும் பறக்கவிட்டாா். பின்னா் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவா்களது வாரிசுகளுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்தாா்.

இதன் பிறகு மாநகா் மற்றும் மாவட்டக் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 58 காவல் துறையினருக்கு முதலமைச்சா் பதக்கங்கள், பாராட்டுச் சான்றிதழ்கள், மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் சிறப்பாக பணிபுரிந்த 92 அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள், 157 காவல் துறையினா் மற்றும் 14 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா் என 263 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

இதையடுத்து, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, வருவாய்த் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் 113 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 91 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

இந்த விழாவில், மாநகரக் காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய், மாநகரக் காவல் துணை ஆணையா்கள் அபிஷேக்குப்தா, வனிதா, மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், சாா் ஆட்சியா் ஸ்ருதன் ஜெய்நாராயணன், உதவி ஆட்சியா் (பயிற்சி) பல்லவி வா்மா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மாநகராட்சி சாா்பில்...

திருப்பூா் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மேயா் என்.தினேஷ்குமாா் தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். இதைத் தொடா்ந்து, மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தியடிகளின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். திருப்பூா் குமரன் நினைவகத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந்த நிகழ்வில், துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி மற்றும் உதவி ஆணையா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com