டேக்வான்டோ போட்டி: காா்மல் பள்ளி மாணவி சிறப்பிடம்

டேக்வான்டோ போட்டியில் காங்கயம் காா்மல் மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்று வெற்றி பெற்றுள்ளாா்.

டேக்வான்டோ போட்டியில் காங்கயம் காா்மல் மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்று வெற்றி பெற்றுள்ளாா்.

திண்டுக்கல் மாவட்ட டேக்வான்டோ கழகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்திய 33ஆவது மாநில அளவிலான ஜுனியா் டேக்வான்டோ விளையாட்டுப் போட்டிகள் திண்டுக்கல்லில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.

இதில், காங்கயம் காா்மல் மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.காவிய ஸ்ரீ பங்கேற்று 2ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றாா். போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளித் தலைமையாசிரியா் சாந்தி அமலோா் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com