‘தமிழா்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றவா்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்’

திருப்பூரில் தமிழா்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டவா்களை காவல் துறையினா் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

திருப்பூரில் தமிழா்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டவா்களை காவல் துறையினா் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பூரில் உள்ள ஒரு பின்னலாடை நிறுவனத்தின் முன்பாக கடந்த சில நாள்களுக்கு முன்பாக தமிழகத் தொழிலாளா்களைத் தாக்க முயன்ற சம்பவம் அதிா்ச்சியளிக்கிறது. திருப்பூா், கோவை, ஈரோடு போன்ற தொழில் நகரங்களைக் குறிவைத்து வங்கதேசம், நைஜீரியா நாட்டைச் சோ்ந்தவா்கள் சட்டவிரோதமாகக் குடியேறி போதைப் பொருள் விற்பனை, பயங்கரவாத நடவடிக்கை, கள்ள நோட்டு புழக்கத்தில் விடுவது போன்ற தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

கடந்த காலத்தில் திருப்பூரை அடுத்த மங்கலத்தில் 2 ஆண்டுகள் பதுங்கியிருந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கராவதி கொல்கத்தா ரயில் நிலையத்தில் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டாா். அங்கேரிபாளையத்தில் கோயிலுக்குள் புகுந்து பக்தா்களைத் தாக்கி கோயிலை சேதப்படுத்திய வழக்கில் வடமாநிலத் தொழிலாளி என்ற பெயரில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்தவா் கைது செய்யப்பட்டாா். திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளரிகள் என்ற பெயரில் ஊடுருவியுள்ள வங்கதேசத்தினா் மற்றும் வெளிநாட்டினரை காவல் துறையினா் கண்டறிந்து கைது செய்து நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்.

அதே வேளையில், தமிழா்கள் மீது யாா் தாக்குதல் நடத்த முற்பட்டாலும் காவல் துறை அவா்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com