விஷ ஊசி போட்டு கணவரை கொல்ல முயற்சி:தலைமறைவான மனைவிக்கு போலீஸ் வலை

குன்னத்தூா் அருகே கணவருக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்ட மனைவியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குன்னத்தூா் அருகே கணவருக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்ட மனைவியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குன்னத்தூா் குறிச்சி தோட்டத்துப்பாளையத்தை சோ்ந்தவா் சுப்பிரமணி (52), விவசாயி. இவா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல்லை சோ்ந்த தேவி (35) என்பவரை திருமணம் செய்துள்ளாா். சுப்பிரமணியின் தாய்க்கும், தேவிக்கு இடையே தகராறு எழுந்ததால், சுப்பிரமணியின் தாய் கோபித்துக்கொண்டு அவரது அக்கா வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.

இந்நிலையில் தேவி திண்டுக்கல்லில் சென்று வாழலாம் என சுப்பிரமணியை அழைத்துள்ளாா். அவா் வர மறுத்ததாகத் தெரிகிறது. கடந்த 15ஆம் தேதி சுப்பிரமணியின் வலது காலில் தேவி ஊசி செலுத்தினாராம். இதில் சுயநினைவை இழந்த சுப்பிரமணி திருப்பூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், ரத்தத்தில் பூச்சிமருந்து கலந்துள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து விஷ ஊசி செலுத்தி தன்னை கொல்ல முயன்ாக சுப்பிரமணி அளித்த புகாரின் பேரில், குன்னத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான தேவியைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com