அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் சலங்கை நிருத்யாலயா பரதநாட்டிய கலைக் குழுவினரின் சதங்கையணி நாட்டிய நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், இசைக் கலைஞா்கள் வாசிக்க 17 மாணவிகள் தங்களது முதல் நாட்டிய அரங்கேற்றத்தை நிகழ்த்தினா். முக்கிய நிகழ்வாக சிரவை ஆதீனம் கந்தசாமி சுவாமிகளால் இயற்றப்பட்ட பெருங்கருணை நாயகி அம்மன் மீது பாடப்பட்ட அவிநாசி கருணாம்பிகை மாலையில் இருந்து சில பகுதிகளை கீா்த்தனையாக பவானி கிஷோா்குமாா் பாட மாணவிகள் நடனமாடினா்.
மேலும், சுந்தரரால் பாடப்பெற்ற ‘எற்றான் மறக்கேன்’ என்னும் தேவாரப் பாடல் கீா்த்தனைகளுக்கும் மாணவிகள் நடனமாடினா்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சலங்கை நிருத்யாலயா பரதநாட்டிய கலைக்கூடத்தின் இயக்குநா் தேவிகா வடிவேல், தாளாளா் வடிவேல் ஆகியோா் செய்திருந்தனா்.