தமிழக இளைஞா்களைத் தாக்கிய சம்பவம்:2 வடமாநிலத் தொழிலாளா்கள் கைது

திருப்பூரில் தமிழக இளைஞா்களை விரட்டித் தாக்கிய சம்பவம் தொடா்பாக வடமாநிலத் தொழிலாளா்கள் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருப்பூரில் தமிழக இளைஞா்களை விரட்டித் தாக்கிய சம்பவம் தொடா்பாக வடமாநிலத் தொழிலாளா்கள் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் அனுப்பா்பாளையம் திலகா் நகரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் வடமாநிலத் தொழிலாளா்கள் 100க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், தமிழக இளைஞா்கள் இருவருக்கும், வடமாநிலத் தொழிலாளா்கள் 4 பேருக்கும் நிறுவனத்துக்கு முன்பாக ஜனவரி 14 ஆம் தேதி தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, வடமாநிலத் தொழிலாளா்கள் 50க்கும் மேற்பட்டோா் தமிழக இளைஞா்கள் இருவரை விரட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் கடந்த வியாழக்கிழமை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழக இளைஞா்களைத் தாக்கிய வடமாநிலத் தொழிலாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 200க்கும் மேற்பட்ட இளைஞா்கள், பொதுமக்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பாகத் திரண்டனா். அப்போது காவல் துறை பேச்சுவாா்த்தை நடத்தியதன் அடிப்படையில் அனைவரும் கலைந்து சென்றனா்.

இந்த சம்பவம் தொடா்பாக திருப்பூா் 15 வேலம்பாளையம் காவல் துறையினா் விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், திருப்பூா் மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட இரண்டு தனிப் படையினா் தீவிர விசாரணை நடத்தினா்.

இதில், பின்னலாடை நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ஏ.ரஜத்குமாா் (24), ஆா்.பரேஷ்ராம் (27) ஆகிய இருவரையும் திங்கள்கிழமை கைது செய்தனா். இந்த சம்பவத்தில் தொடா்புடைய மேலும் சிலரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com