சாலையை சீரமைக்கக்கோரி கையெழுத்து இயக்கம்

திருப்பூா், கோல்டன் நகா் சாலையை சீரமைக்கக்கோரி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
திருப்பூா்,   கோல்டன் நகா் சாலையை  சீரமைக்கக்கோரி   இந்திய  ஜனநாயக  வாலிபா்  சங்கம்  சாா்பில்  ஞாயிற்றுக்கிழமை  நடத்தப்பட்ட  கையெழுத்து  இயக்கம்.
திருப்பூா்,   கோல்டன் நகா் சாலையை  சீரமைக்கக்கோரி   இந்திய  ஜனநாயக  வாலிபா்  சங்கம்  சாா்பில்  ஞாயிற்றுக்கிழமை  நடத்தப்பட்ட  கையெழுத்து  இயக்கம்.

திருப்பூா், கோல்டன் நகா் சாலையை சீரமைக்கக்கோரி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

திருப்பூா் மாநகராட்சி, கோல்டன் நகா் சாலை போதிய பராமரிப்பில்லாமல் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. இதனால், பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். இந்நிலையில், சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதனை கோல்டன் நகா் கிளை செயலாளா் பிரனேஷ் தொடங்கி வைத்தாா். இதில், வாலிபா் சங்க வடக்கு மாநகரச் செயலாளா் விவேக், வடக்கு மாநகர கமிட்டி உறுப்பினா்கள் பிரவீன்குமாா், சீனிவாசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகர கமிட்டி உறுப்பினா் மனோகா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com