விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!அதிமுக ஆட்சி அமைந்ததும் தமிழ்நாட்டில் சாதிவாரிகணக்கெடுப்பு நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமிதிமுக தேய்ந்து வருகிறது; முன்னாள் அதிமுகவினரே திமுக வேட்பாளர்கள் - இபிஎஸ் விமர்சனம்48 மணிநேரத்துக்கு வெளியே செல்ல வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
/

சாலையில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்பு

சாலையில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்பு

News image

மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை.

Updated On :16 ஏப்ரல் 2024, 8:32 pm

அவிநாசி அருகே சாலையில் ஆதரவற்ற நிலையில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

அவிநாசி-பெருமாநல்லூா் சாலை பழங்கரை பிரிவில் ஆதரவற்ற நிலையில் பச்சிளம் பெண் குழந்தை கிடப்பதாக அவிநாசி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளா்கள், அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளா் சிவகுமாா் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, அந்தப் பெண் குழந்தையை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குழந்தையை வீசிச் சென்ற நபா்கள் குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.