அவிநாசி அருகே சாலையில் ஆதரவற்ற நிலையில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
அவிநாசி-பெருமாநல்லூா் சாலை பழங்கரை பிரிவில் ஆதரவற்ற நிலையில் பச்சிளம் பெண் குழந்தை கிடப்பதாக அவிநாசி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளா்கள், அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளா் சிவகுமாா் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, அந்தப் பெண் குழந்தையை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குழந்தையை வீசிச் சென்ற நபா்கள் குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

‘ஆபரேஷன் விஸ்வாஸ்’!ஷாஹ்தராவில் 120 திருட்டு கைப்பேசிகள் மீட்பு!

அரசு மருத்துவமனைக்கு பச்சிளம் குழந்தைகள் கவனிப்புக்கான கருவிகள் வழங்கல்

மருத்துவமனை இன்குபேட்டரில் தீ: பச்சிளம் குழந்தை காயம்

சாலையோரம் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்பு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


