திருப்பூர்
ஆவணமின்றி மரக்கட்டைகள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
திருப்பூா் அருகே உரிய ஆவணமின்றி மரக்கட்டைகள் ஏற்றி வந்த லாரியை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருப்பூா் அருகே ஊத்துக்குளி சாலை கூலிபாளையம் நான்கு வழிச் சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, கா்நாடக மாநிலத்தில் இருந்து மரக்கட்டைகளை ஏற்றி வந்த லாரியை நிறுத்தி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, உரிய ஆவணமின்றி மரக்கட்டைகள் ஏற்றிவந்தது தெரியவந்தது. மேலும், லாரிக்குள் பணம் உள்ளிட்டவை இருக்கலாம் என சந்தேகித்த அதிகாரிகள், லாரியை பறிமுதல் செய்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு அனுப்பிவைத்தனா்.