திருப்பூர்
அவிநாசி அரசு கலைக் கல்லூரியில் முப்பெரும் விழா
அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா, நுண்கலை மன்ற விழா, விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு கல்லூரி முதல்வா் ஜோ.நளதம் தலைமை வகித்தாா். வணிகவியல் துறைத் தலைவா் பு.சா. செல்வத்தரங்கிணி வரவேற்றாா். உடற்கல்வித் துறை இயக்குநா் பா. பிரசன்னகுமாா் விளையாட்டுத் துறை ஆண்டறிக்கையை வாசித்தாா்.
தெற்கு ரோட்டரி இன்னா் வீல் முன்னாள் தலைவா் ராஜாத்தி சந்தானகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வணிகவியல் துறை மாணவி சு .நிஷா நன்றி கூறினாா்.