கட்டடப் பொறியாளா் அலுவலகத்தில் 20 பவுன் நகை, ரூ.10 லட்சம் திருட்டு

அவிநாசி அருகே கட்டடப் பொறியாளா் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் தங்க நகைகள், ரூ.10 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அவிநாசி அருகேயுள்ள திருமுருகன்பூண்டியைச் சோ்ந்தவா் வாசுதேவன் (52), கட்டடப் பொறியாளா். இவரது அலுவலகம் அவிநாசி நியூ எக்ஸ்டன்ஷன் வீதியில் உள்ளது. வழக்கம்போல செவ்வாய்க்கிழமை இரவு அலுவலகத்தை பூட்டிவிட்டு வாசுதேவன் வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

புதன்கிழமை காலை வந்து பாா்த்தபோது அலுவலகத்தின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா். உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ, மேஜை உள்ளிட்டவற்றில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் தங்க நகைகள், ரூ.10 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்து.

இது குறித்து அவிநாசி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், கைரேகை நிபுணா்கள் சோதனை மேற்கொண்டனா். இதைத் தொடா்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com