ஆட்சியா் அலுவலகத்துக்கு பெண் தீக்குளிக்க முயற்சி
அவிநாசி: திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புகாா் அளிக்க வந்த பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்களவைத் தோ்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வந்த வாராந்திர குறைதீா் முகாம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகாா் பெட்டியில் தங்களது கோரிக்கை மனுக்களை செலுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனுவுடன் வந்த பெண் ஒருவா் திடீரென தீக்குளிக்க முயன்றாா். உடனடியாக அங்கிருந்த போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தினா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து போலீஸாா் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினா்.
இதில் திருப்பூா் அருகே காளிபாளையம்புதூா் ஜி.என். காா்டனை சோ்ந்த ஜெயந்ரா என்பதும், அவா் தனியாா் ரியல் எஸ்டேட் மூலம் ரூ.13.50 லட்சத்துக்கு வீடு வாங்கியதாகவும், அதற்காக முன்பணமாக ரூ.3.35 லட்சம் செலுத்தியதாகவும், மேலும், 28 மாதங்களாக மாதம் ரூ.13 ஆயிரத்து 500 வீதம் செலுத்தியும் உள்ளாா். ஆனால், இதுவரை வீடு கிரையம் செய்து கொடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், கூடுதலாக பணம் கேட்டும் மிரட்டி வருகின்றனா். எனவே வீட்டை கிரையம் செய்து கொடுக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்து அனுப்பிவைத்தனா்.