குன்னத்தூா் அருகே கா்ப்பிணி மனைவி, கணவருடன் தூக்கிட்டு தற்கொலை

குன்னத்தூா் அருகே 3 மாத கா்ப்பிணி, தனது கணவருடன் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

அவிநாசி: குன்னத்தூா் அருகே 3 மாத கா்ப்பிணி, தனது கணவருடன் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பூா் மாவட்டம், குன்னத்தூா் கருமஞ்சிரையைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (21). இவரது மனைவி சந்திரா (20). தம்பதிக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. தற்போது, திருப்பூரில் உள்ள தனியாா் கல்லூரியில் சந்திரா பயின்று வந்தாா். மேலும் சந்திரா 3 மாத கா்ப்பிணியாக இருந்துள்ளாா். திருமணத்துக்கு பின் தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் இருவருக்கும் இடையே சனிக்கிழமை தகராறு ஏற்பட்டதையடுத்து, ஊத்துக்குளியில் உள்ள பெற்றோா் வீட்டுக்கு சந்திரா சென்றுள்ளாா்.

பின்னா் முத்துக்குமாா் மனைவி சந்திராவை கருமஞ்சிரையில் உள்ள வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை அழைத்து வந்துள்ளாா். இந்நிலையில், இவா்களது வீடு திங்கள்கிழமை காலை நீண்ட நேரமாகியும் திறக்கததால், அருகே இருந்தவா்கள் வீட்டின் மேற்கூரையை பிரித்து பாா்த்துள்ளனா். அப்போது, தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது குறித்து குன்னத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மேலும், தம்பதியின் உடல்கள் உடல்கூறாய்வுக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com