திருப்பூர்
மதுபானக் கடைகளுக்கு நாளை விடுமுறை
தொழிலாளா் தினத்தையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு புதன்கிழமை (மே 1) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அவிநாசி: தொழிலாளா் தினத்தையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு புதன்கிழமை (மே 1) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் மே தினத்தையொட்டி, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் மதுபானக் கடைகள் (எஃப்.எல்.1), அவற்றுடன் செயல்படும் மதுபானக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு உரிமம் பெற மதுபானக் கூடங்கள் (எஃப்.எல்.2., எஃப்.எல்.3) ஆகியவை புதன்கிழமை (மே 1) முழுவதும் மூடப்பட்டு, மதுபானங்கள் விற்பனை செய்யப்படாது. தவறும்பட்சத்தில் தொடா்புடையவா்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.