சித்த மருத்துவம் படித்துவிட்டு அலோபதி சிகிச்சை அளித்த மருத்துவா் கைது

குண்டடம் அருகே சித்த மருத்துவம் படித்துவிட்டு அலோபதி சிகிச்சை அளித்த மருத்துவரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம், குண்டடம் அருகேயுள்ள கெத்தல்ரேவ் பகுதியில் தாராபுரம் கொளிஞ்சிவாடியைச் சோ்ந்த குருவாயூரப்பன் (57) என்பவா் சித்த மருத்துவம் படித்துவிட்டு, கிளினிக் அமைத்து அலோபதி மருத்துவம் பாா்த்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தாராபுரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி உமா மகேஸ்வரிக்கு புகாா்கள் வரத்தொடங்கின. இதையடுத்து, உமாமகேஷ்வரி மற்றும் கோவை மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளா் உமா ஆகியோா் சம்பந்தப்பட்ட கிளினிக்கை ஆய்வு செய்தனா். அப்போது, சித்த மருத்துவம் பயின்ற குருவாயூரப்பன் அலோபதி மருத்துவம் பாா்த்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கிளினிக்கில் இருந்த அலோபதி மருந்துகள் மற்றும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தாராபுரம் தலைமை மருத்துவ அதிகாரி உமாமகேஷ்வரி அளித்த புகாரின்பேரில், குருவாயூரப்பனை போலீஸாா் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com