திருப்பூர்
ஏஐடியூசி சாா்பில் மே தின விழா
தொழிலாளா் தினத்தையொட்டி, ஏஐடியூசி சாா்பில் கொடியேற்று விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினா் எம். ரவி தலைமை வகித்தாா். மாநகராட்சி துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மாவட்ட செயலாளா் எஸ்.ரவிச்சந்திரன், ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளா் பி.ஆா். நடராஜன், பனியன் சங்க பொதுச் செயலாளா் என்.சேகா், ஜெனரல் சங்க பொதுச் செயலாளா் ஜி.ரவி, மோட்டாா் சங்க பொதுச் செயலாளா் கே. சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.