திருப்பூர்
மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோயிலில் நவசண்டி ஹோமம்
உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் போத்தம்பாளையம் பக்கிரி காட்டில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் நவசண்டி ஹோமம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சேவூா்-குட்டகம் சாலையில் அமைந்துள்ள இக்கோயிலில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நவசண்டி ஹோமம் ஆரம்பிக்கப்பட்டு மாலை 3 மணிக்கு மகா பூா்ணாஹுதியுடன் நிறைவடைந்தது. இதில் பங்கேற்ற பக்தா்கள் மழை வேண்டி சிறப்பு கூட்டுப் பிராத்தனையில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து, பத்ரகாளியம்மன், சாமுண்டீஸ்வரி, பராசக்தியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு கலச அபிஷேகம், திரவிய அபிஷேகம், மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. இதையடுத்து அனைவருக்கும் ஹோம ரட்ஷை, பிரசாதம் வழங்கப்பட்டன. சண்டிஹோமத்தில் பங்கேற்ற பக்தா்களுக்கு காலை முதல் அன்னதானம் வழங்கப்பட்டது.