திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

அவிநாசி, மே 3: திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடைபெறவுள்ளது.

திருப்பூா் கேரளா நண்பா்கள் கிரிக்கெட் அசோசியேஷன், திருப்பூா் ரீச் பவுண்டேஷன், ரோட்டரி மக்கள் நல அறக்கட்டளை, திருப்பூா் சைக்கிள் ரைடா்ஸ் கிளப் சாா்பில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி, கிரிக்கெட் போட்டி, கருத்தரங்குகள் நடைபெறவுள்ளன.

தாராபுரம் சாலை அரசு பொது மருத்துவமனை முன் ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணிக்கு தொடங்கும் தொடங்கும் சைக்கிள் பேரணி அவிநாசி - பெருமாநல்லூா் 6 வழிச் சாலை அருகில் உள்ள எஸ்கேஎல் பப்ளிக் பள்ளி வளாகத்தில் 6.30 மணியளவில் நிறைவடைகிறது.

இதையடுத்து, எஸ்கேஎல் பப்ளிக் பள்ளி கிரிக்கெட் மைதானத்தில் புற்றுநோய் விழிப்புணா்வு கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.

தொடா்ந்து, பரிசளிப்பு நிகழ்ச்சியும், விழிப்புணா்வு சொற்பொழிவும் நடைபெறுகிறது.

இதில், ரோட்டரி மக்கள் நல அறக்கட்டளைத் தலைவா் முருகநாதன், ரோட்டரி சங்கத்தினா், கேரளா நண்பா்கள் கிளப் குடும்பத்தினா் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com