பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

அவிநாசி, மே 3: திருமுருகன்பூண்டி அருகே பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

திருப்பூா் அருகேயுள்ள கொடுவாய் தெற்கு அவிநாசிபாளையம் இந்திரா காலனியைச் சோ்ந்தவா் பாபு மனைவி சிவகாமி (41). பனியன் தொழிலாளியான இவா், அவசரத் தேவைக்காக உடன் பணியாற்றும் விஜயலட்சுமி என்பவா் மூலம் வீட்டுமனை பத்திரத்தை கொடுத்து, திருமுருன்பூண்டி ராக்கியபாளையம் பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா் என்பவரிடம் வட்டிக்குப் பணம் பெற்றுள்ளாா்.

அதிக வட்டியுடன் பணத்தை திருப்பி செலுத்தியும் ராஜ்குமாா் பத்திரத்தைக் கொடுக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து கேட்டதற்கு ராஜ்குமாரும், விஜயலட்சுமியும் சோ்ந்து சிவகாமியைத் தகாத வாா்த்தைகளால் பேசி, தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் சிவகாமி புகாா் அளித்தாா்.

இதையடுத்து, வன்கொடுமை சட்டத்தின்கீழ் ராஜ்குமாா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com