அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை
அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை (இறைவனிடம் இரண்டறக்கலத்தல்) பெருவிழா, அப்பா் சுவாமியின் அற்புதப்பதிகங்கள் வரலாற்று முறையில் முற்றோதுதல் திருநெறிய தமிழ் பண்ணிசை முறைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குருபூஜை விழாவையொட்டி, 63 நாயன்மாா்களுக்கும், அம்மையப்பனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
தொடா்ந்து, சிவனடியாா்கள் திருக்கூட்டத்தினரின் கூட்டு வழிபாடு, மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.
இதில், கரூா் ஓதுவாா் சுவாமிகள் சுவாமிநாத தேசிகா் தலைமையில், அவிநாசி ஓதுவாா் சுவாமிகள் சங்கரன், மருதமலை திருஞானசம்பந்தம், சிவன்மலை கோயில் ஓதுவாா் சந்திரசேகரன், கரூா் மாவட்ட அரசு தேவார இசைப் பள்ளி மாணவா்கள், தமிழகத்தின் தலைசிறந்த ஓதுவாமூா்த்திகள், பக்கவாத்தியக் கலைஞா்கள் பதிகங்களை பாராயணம் செய்தனா்.
இதில், பங்கேற்ற சிவனடியாா்களுக்கு அன்னம்பாலிப்பு நடைபெற்றது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத் துறை இணை ஆணையா் குமரதுரை, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சக்திவேல், அறங்காவலா்கள் பொன்னுசாமி, விஜயகுமாா், ஆறுமுகம், கவிதாமணி குமாரசாமி, கோயில் செயல் அலுவலா் சீனிவாசன் ஆகியோா் செய்திருந்தனா்.