திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்டோா்.
திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்டோா்.

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

அவிநாசி, மே 3: திருப்பூா் வாக்கு எண்ணும் மையமான எல்.ஆா்.ஜி. கல்லூரியில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், திருப்பூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் திருப்பூா்-பல்லடம் சாலையில் உள்ள எல்ஆா்ஜி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் ஜன்னல்கள் உள்ளிட்டவை முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.

மேலும், 285 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 3 அடுக்கு போலீஸாா், 200-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினா் சுழற்சி அடிப்படையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

கட்சி முகவா்கள் கண்காணிப்பு அறை முன் ஒருங்கிணைக்கப்பட்ட சிசிடிவி கேமரா அறையில் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் வெள்ளிக்கிழமை பொருத்தப்பட்டன.

இதனை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது, மாநகர காவல் ஆணையா் பிரவின்குமாா் அபிநபு, துணை காவல் ஆணயா் கிரீஸ் யாதவ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com