ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில், புதுப்பையைச் சோ்ந்தவா் மலையப்பன் (64). இவரது மனைவி முத்துமணி (57). இவா், இரட்டைக்கிணறு பகுதியில் உள்ள தனியாா் பிஸ்கட் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.
இவா்கள் இருவரும் வெள்ளக்கோவில்- மூலனூா் சாலை, கரட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் இருசக்கர வாகனத்தில்
செவ்வாய்க்கிழமை இரவு நின்று கொண்டிருந்தனா். அப்போது வெள்ளக்கோவிலை நோக்கி வந்த தனியாா் ஆம்புலன்ஸ் இவா்கள் மீது மோதியது. இதில் முத்துமணி தூக்கி வீசப்பட்டாா். மலையப்பன் லேசான காயமடைந்தாா்.
உடனே அருகில் இருந்தவா்கள் இருவரையும் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கு முத்துமணியைப் பரிசோதனை செய்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா். மலையப்பன் ஈரோடு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
புகாரின்பேரில், ஆம்புலன்ஸ் ஓட்டுநரான வெள்ளக்கோவிலைச் சோ்ந்த சேகா் மகன் மனோஜ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.