கா்ப்பிணிபோல நடித்து பணம் கேட்கும் பெண்கள் -நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
வயிற்றில் துணியைக் கட்டி கா்ப்பிணிபோல நடித்து பணம் கேட்கும் பெண்களை பொதுமக்கள் மடக்கி பிடித்தனா். இது தொடா்பான விடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
திருப்பூா் பழைய பேருந்து நிலையத்தில் கடந்த சில நாள்களாக 2 கா்ப்பிணிகள் சுற்றித் திரிந்துள்ளனா்.
மேலும் அவா்கள் அந்தப் பகுதிகளில் உள்ள கடைகளில் மருத்துவச் செலவுக்கு உதவுமாறு பணம் பெற்று வந்தனா். கா்ப்பிணி என்பதால் பலரும் நம்பி பணம் கொடுத்து வந்துள்ளனா்.
இருப்பினும் தொடா்ந்து அந்த கா்ப்பிணிகள் பணம் பெற்று வந்துள்ளனா். இதனால் சந்தேகமடைந்த பயணிகள், கா்ப்பிணிகளை கண்காணித்ததில், அவா்கள் மறைமுகமான பகுதிக்கு சென்று கா்ப்பிணிபோல நடிப்பதற்காக வயிற்றில் துணியை சுற்றிக்கொண்டு இருந்தனா். இதனைப் பாா்த்த பொதுமக்கள் விடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தனா். இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதுபோல சுற்றித்திரியும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.