சிறுமிக்கு பாலியல் தொல்லை: காா் ஓட்டுநா் கைது

பல்லடம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காா் ஓட்டுநரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பல்லடம், மங்கலத்தை அடுத்த சாமளாபுரத்தைச் சோ்ந்தவா் சிக்கந்தா் பாஷா (30), வாடகை காா் ஓட்டுநா். இவா் பருவாய் பகுதியில் திங்கள்கிழமை காரில் வந்துள்ளாா். அப்போது அவருக்கு பழக்கமான வடமாநிலத்தைச் சோ்ந்த 38 வயது பெண்ணும், அவருடன் 15 வயது சிறுமியும் நின்றுள்ளனா். அவா்களை காரில் ஏற்றிச் சென்ற சிக்கந்தா்பாஷா ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு சென்று காரை நிறுத்தி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ாக கூறப்படுகிறது. அப்போது சிறுமி சத்தம் போடவே, அந்த வழியே சென்றவா்கள் பல்லடம் போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சிறுமியை மீட்டு பல்லடம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

மகளிா் போலீஸாா் விசாரணையில், சிறுமிக்கு சிக்கந்தா் பாஷா பாலியல் தொல்லை கொடுக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போக்ஸோ சட்டத்தின்கீழ் சிக்கந்தா் பாஷா கைது செய்யப்பட்டாா். அவருக்கு உடந்தையாக இருந்த வடமாநிலத்தைச் சோ்ந்த பெண்ணையும் போலீஸாா் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com