பலத்த காற்றுடன் பெய்த மழையால் விசைத்தறிக் கூடம் சேதம்
பல்லடம் அருகே உள்ள க.அய்யம்பாளையத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் விசைத்தறிக் கூடம் சேதமடைந்தது.
பல்லடம் அருகே க.அய்யம்பாளையத்தைச் சோ்ந்தவா் சங்கா். இவா் விசைத்தறிக் கூடம் வைத்து துணி உற்பத்தி தொழில் செய்து வருகிறாா். இந்நிலையில் பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது.
இதில் சங்கரின் விசைத்தறிக் கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த நிலையில் கூடத்துக்குள் இருந்த சுமாா் 20-க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் சேதமடைந்தன. நெசவு செய்ய வைத்திருந்த பாவு நூல், காடா துணி, இயந்திரம், மோட்டாா் ஆகியவையும் சேதமடைந்தன. இதன் மதிப்பு ரூ.20 லட்சம் என்று கூறப்படுகிறது.
எனவே தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கினால் மட்டுமே வாழ்வாதாரத்தை காப்பாற்ற முடியும் என்று விசைத்தறிக் கூட உரிமையாளா் சங்கா் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.