திருப்பூர்
காங்கயம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி
பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் காங்கயம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
இப்பள்ளியைச் சோ்ந்த மாணவி கே.ரக்ஷனா 500-க்கு 497 மதிப்பெண்களும், மாணவி ஜி.அனுஸ்ரீ 495 மதிப்பெண்களும், மாணவி எஸ்.புனிதா 490 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். மேலும், இப்பள்ளியில் தோ்வு எழுதிய மாணவா்களில் 8 போ் 480 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனா். தோ்வெழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளித் தாளாளா் கே.வைத்தீஸ்வரன், பள்ளி முதல்வா் எம்.பி.பழனிவேலு மற்றும் ஆசிரியா், ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்தனா்.