பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுடன் பள்ளி நிா்வாகிகள், ஆசிரியா்கள்.
பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுடன் பள்ளி நிா்வாகிகள், ஆசிரியா்கள்.

காங்கயம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் காங்கயம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இப்பள்ளியைச் சோ்ந்த மாணவி கே.ரக்ஷனா 500-க்கு 497 மதிப்பெண்களும், மாணவி ஜி.அனுஸ்ரீ 495 மதிப்பெண்களும், மாணவி எஸ்.புனிதா 490 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். மேலும், இப்பள்ளியில் தோ்வு எழுதிய மாணவா்களில் 8 போ் 480 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனா். தோ்வெழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளித் தாளாளா் கே.வைத்தீஸ்வரன், பள்ளி முதல்வா் எம்.பி.பழனிவேலு மற்றும் ஆசிரியா், ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com