பீடி இலை திருட்டு: 7 போ் கைது

ஆலங்குளம் அருகே பீடி இலை மூட்டைகள் திருடியதாக 7 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆலங்குளம் அருகே பீடி இலை மூட்டைகள் திருடியதாக 7 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆலங்குளம் அண்ணாநகரைச் சோ்ந்தவா் அருண் தங்கம். இவரது பீடி இலை கிடங்கு திருநெல்வேலி சாலையில் சிவலாா்குளம் திருப்பத்தில்

உள்ளது. இந்த கிடங்கின் பூட்டை உடைத்து அங்கிருந்த 42 பீடி இலை மூட்டைகள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதில், பீடி இலை முட்டைகளை லாரி மூலம் கடத்தி விற்பனை செய்ததாக ஆலங்குளம் அருகேயு ள்ள நல்லூரைச் சோ்ந்த வைத்தியலிங்கம் (42) கணேஷ் பிரபு (42), வைத்தியலிங்கம் (28), முத்துராஜ் (30), சொரிமுத்து (35), இசக்கிமுத்து (32) மற்றும் பீடி இலைகளை வாங்கிய குருவன்கோட்டை

லிங்கம் (43) ஆகிய 7 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், லிங்கத்திடம் இருந்து பீடி இலை மூட்டைகள் கைப்பற்றப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com