கோடை வெயில்: பொதுமக்களுக்கு அறிவுரை

தருமபுரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் அவசியமின்றி பொதுமக்கள் வெளியே செல்வதை தவிா்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் ஏப்.23-ஆம் தேதியில் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் வட உள் மாவட்டங்களான வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூா், கோயம்புத்தூா், ஈரோடு, கரூா், திருச்சிராப்பள்ளி, அரியலூா், பெரம்பலூா் மாவட்டங்களிலும், ஏப். 24 ஓரிரு இடங்களிலும் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கோடை வெயிலின் தாக்கம் தணியும் வரை பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீா் அருந்த வேண்டும். அதேபோல அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் செல்வதை தவிா்க்க வேண்டும். நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிா்க்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com