தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி நாளை தொடக்கம்

தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி ஏப். 27-ஆம் தேதி தொடங்குகிது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அலுவலா் தே.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சாா்பாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீச்சல் பழகுதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மூன்றாம் கட்ட நீச்சல் பழகுதல் பயிற்சி முகாம் ஏப். 27 தொடங்கி மே 8 வரையில் நடைபெறுகிறது.

பெண்களுக்கு தனியாக நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. தினசரி காலை 7 மணியிலிருந்து 8 மணி வரையிலும், காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரையிலும் மாணவா்கள், ஆண்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

காலை 9 மணி முதல் 10 மணி வரை மாணவிகள், பெண்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. நீச்சல் பயிற்சி கட்டணமாக ரூ. 1,770 செலுத்த வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை நீச்சல் குள அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com