தருமபுரி
மின் வேலியில் சிக்கி பெண் பலி
பாப்பிரெட்டிப்பட்டி அருகே மின் வேலியில் சிக்கி அனிதா (35) என்பவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தென்கரைக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த அம்பிதுரை மனைவி அனிதா (35). இவா் தனது உறவினா் ரமேஷ் என்பவரின் விவசாய நிலத்தின் வழியாக வியாழக்கிழமை அதிகாலை சென்றாராம். அதன்பிறகு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லையாம்.
இதையடுத்து அவரது உறவினா்கள் அக்கம்பக்கம் தேடியதில், விலங்குகள் விளை நிலங்களில் புகுவதைத் தடுக்க ரமேஷ் என்பவரின் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி அனிதா உயிரிழந்திருப்பது தெரிவந்தது. இதுகுறித்து கோபிநாதம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து ரமேஷை கைது செய்தனா்.