அரூர் கீரைப்பட்டி புது ஏரியில் வண்டல் மண் அள்ள மாவட்ட நிர்வாகம் விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏரியிலிருந்து மண் அள்ள அனுமதி கோரி, அரூர் கோட்டாட்சியர் அலுவலகம், பொதுப் பணித் துறையிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லாததால், கீரைப்பட்டி, செல்வசமுத்திரம், கௌப்பாறை பகுதிகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏரியில் மண் அள்ள முயன்றனர். தகவலறிந்து அங்குச் சென்ற அரூர் வட்டாட்சியர் அ.செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் ஆ.சிவஞானம், கிராம நிர்வாக அலுவலர் வே.வெங்கடேசன் ஆகியோர் ஓரிரு நாள்களில் மாவட்ட நிர்வாகத்திடமிருந்து மண் அள்ள அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறியதையடுத்து, விவசாயிகள் மண் அள்ளுவதை கைவிட்டனர்.