தருமபுரி மாவட்டம், பென்னாகரம் மற்றும் காரிமங்கலம் வட்டார விவசாயிகள் 80 பேர் பங்கேற்ற தானியங்கள் சாகுபடி மற்றும் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பற்றிய ஒரு நாள் பயிற்சி பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இப்பயிற்சியை, விரிவாக்க மைய துணை வேளாண் அலுவலர் சண்முகதேவன் தொடங்கி வைத்துப் பேசினார்.
தருமபுரி உழவர் பயிற்சி நிலையத்தின் துணை இயக்குநர் இளங்கோவன், பேராசிரியர் சங்கீதா, ஜோதிலட்சுமி உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளின் கீழ் பேசினர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் கா.சரவணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.