தருமபுரி
கள்ளச் சாராயம் விற்பனை: பெண் கைது
கோட்டப்பட்டி அருகே கள்ளச் சாராயம் விற்பனை செய்ததாக பெண் ஒருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
கோட்டப்பட்டி அருகே கள்ளச் சாராயம் விற்பனை செய்ததாக பெண் ஒருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
அரூர் வட்டம், முள்ளிக்காடு பகுதியில் கள்ளச் சாராயம் விற்பனை செய்து வருவதாக அந்த ஊரைச் சேர்ந்த வெங்கட்ராமன் மனைவி ஜெயலட்சுமியை (30) போலீஸார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அவரிடமிருந்து 5 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து கோட்டப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.