தருமபுரி
சரக கபடிப்போட்டி: கடகத்தூர் பள்ளி மாணவியர் சிறப்பிடம்
சரக அளவிலான பெண்கள் கபடிப் போட்டிகளில் கடகத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியர் சிறப்பிடம் பெற்றனர்.
சரக அளவிலான பெண்கள் கபடிப் போட்டிகளில் கடகத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியர் சிறப்பிடம் பெற்றனர்.
சரக அளவிலான பெண்கள் கபடிப் போட்டி அண்மையில் அதியமான்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இப் போட்டிகளில், கடகத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியர் பங்கேற்று விளையாடினர். இதில், இளையோர் பிரிவு, மூத்தோர், மேல் மூத்தோர் பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளிலும் கடகத்தூர் பள்ளி மாணவியர் முதலிடத்தை பிடித்தனர். மேலும், மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாட தகுதி பெற்றனர். இம்மாணவியரை, பள்ளித் தலைமை ஆசிரியர் வே.பாலசுப்ரமணியன், உடற்கல்வி ஆசிரியை ஆர்.கல்பனா மற்றும் ஆசிரியர்கள் திங்கள்கிழமை பள்ளியில் நடைபெற்ற விழாவில் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.