அரூரை அடுத்த தீர்த்தமலையில் மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பாஜக விவசாய அணி மாவட்ட பொதுச் செயலர் குழந்தை ரவி, தருமபுரி மாவட்ட ஆட்சியருக்கு சனிக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு:
அரூர் வட்டம், தீர்த்தமலையில் உள்ள அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயிலின் உச்சிக் கோயிலுக்குச் செல்லும் வழியில் 30- க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் பழுதாகியுள்ளன. இதனால் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் மலைக் கோயிலுக்குச் செல்பவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது.
இதேபோல, கோயில் வளாகத்தில் பெண்கள் உடைகள் மாற்றுவதற்கான தனி இடங்கள் இல்லை. எனவே, தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் மலைப்பாதையில் பழுதான மின் விளக்குகளை சரி செய்யவும், பெண்களுக்கான உடைகள் மாற்றுவதற்கு தனி இடமும், குடிநீர் மற்றும் தூய்மையைப் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.