தருமபுரி நகர மற்றும் புறநகரப் பேருந்து நிலையங்களில் உள்ள கடைகளில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் புதன்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.
பேருந்து நிலையத்துக்குள்ளேயும், வெளியேயும் இருந்த 20 கடைகளில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் கோபிநாத், நாகராஜன், சேகர் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர்.
கார்பைடு கற்கள் வைத்து பழங்கள் பழுக்க வைக்கப்படுகின்றனவா? என்பது குறித்து பழக்கடைகளில் சோதனை நடத்தப்பட்டதாகவும், இனிப்புப் பலகாரங்களில் நிர்ணயம் செய்யப்பட்ட அளவைவிட வண்ணப் பொடிகளைக் கலக்கக் கூடாது என்று அறிவுரை வழங்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், சுமார் ரூ. ஆயிரம் மதிப்பில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் பொட்டலங்கள், தயாரிப்புத் தேதி குறிப்பிடாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 50 குளிர்பானப் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.