ஊத்தங்கரை கிளை நூலகத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா

ஊத்தங்கரை கிளைநூலகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

ஊத்தங்கரை கிளைநூலகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட நூலக அலுவலரின் ஆணைக்கிணங்க கொண்டாடப்பட்ட இவ்விழாவுக்கு, தலைமை கிளை நூலகர் தேவேந்திரன் தலைமை வகித்தார். கிளை நூலகர் சடகோபன் வரவேற்றார். விழாவின் சிறப்பு விருந்தினர்களாக உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் முருகன், தொழிலதிபர் சையத் முஸ்தபா, ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில், ஊத்தங்கரை அரசு மாணவ, மாணவியர் எம்.ஜி.ஆர். குறித்து பேசினர். சிறப்பு விருந்தினர்கள் எம்.ஜி.ஆர். குறித்த கருத்துகளை மாணவர்களிடையே எடுத்துரைத்தனர். தொடர்ந்து, அரசு பள்ளி மாணவ-மாணவியருக்கிடையே ஓவியப்போட்டி நடத்தி வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஊர்ப்புற நூலகர் பொ.சண்முகம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com