தருமபுரி கோட்டத்துக்குள்பட்ட அஞ்சல் துறை நுகர்வோர் தங்களது குறைகளை வரும் மார்ச் 28-ஆம் தேதிக்குள் எழுதி அனுப்பலாம் என கோட்ட கண்காணிப்பாளர் ந. கார்த்திகேயன் அழைப்பு விடுத்துள்ளார்.
அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பெயருக்கு அனுப்ப வேண்டிய அந்தக் கடித உறையின் மேல் தருமபுரி அஞ்சல் கோட்ட மக்கள் குறைகேட்புக் கூட்டம் எனக் குறிப்பிட வேண்டும். குறைகளை வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தலைமை அஞ்சலகத்தில் நடைபெறும் மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கார்த்திகேயன் தெரிவித்தார்.