பாலக்கோட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாலக்கோடு பேருந்து நிலையம் முன் மக்கள் சமூக நீதி பேரவை சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மக்கள் சமூக நீதி பேரவை செயலர் கோவிந்தன் தலைமை வகித்தார். இதில், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாவட்ட அமைப்பாளர் ரவி, மாவட்டச் செயலர் கண்ணன், ஒன்றியச் செயலர் ராஜ்குமார், ஒன்றிய அமைப்பாளர் சிக்கராஜ், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.