பள்ளி மாணவர்களுக்கு கேரம் விளையாட்டுப் போட்டி

தருமபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கான கேரம் விளையாட்டுப் போட்டிகள் வரும் அக். 5-ஆம் தேதி மாவட்ட விளையாட்டரங்கில் நடத்தப்படவுள்ளன.

தருமபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கான கேரம் விளையாட்டுப் போட்டிகள் வரும் அக். 5-ஆம் தேதி மாவட்ட விளையாட்டரங்கில் நடத்தப்படவுள்ளன.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட அளவிலான ஒற்றையர் மற்றும் இரட்டையருக்கான கேரம் விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கில் வரும் அக். 5-ஆம் தேதி நடைபெறவுள்ளன.  இளநிலை பிரிவில் மழலையர் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை இருபாலரும், முதுநிலை பிரிவில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை இருபாலரும் பங்கேற்கலாம்.
போட்டிகளில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் ‌w‌w‌w.‌s‌d​a‌t.‌t‌n.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஒற்றையர் பிரிவில் விளையாடும் மாணவர்கள் இரட்டையர் பிரிவில் விளையாட அனுமதி இல்லை.
மாவட்ட போட்டிகளில் வெற்றிபெறுவோருக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும். மாவட்டத்தில் முதலிடம் பெறுவோர் மாநிலப் போட்டிக்கு அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவர். எனவே, ஆர்வமுள்ளோர் முறைப்படி ஆன்லைனில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com