"சென்னை-திருவனந்தபுரம், மும்பை-கன்னியாகுமரி ரயில்கள் மொரப்பூரில் நின்று செல்ல வேண்டும்'

தருமபுரி அருகேயுள்ள மொரப்பூர் ரயில் நிலையத்தில், சென்னை-திருவனந்தபுரம், மும்பை-கன்னியாகுமரி ஆகிய ரயில்கள்

தருமபுரி அருகேயுள்ள மொரப்பூர் ரயில் நிலையத்தில், சென்னை-திருவனந்தபுரம், மும்பை-கன்னியாகுமரி ஆகிய ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கம் மற்றும் பாஜக சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இக்கோரிக்கையை வலியுறுத்தி, தருமபுரி ரயில் பயணிகள் சங்கத்தினர் மற்றும் தருமபுரி மாவட்ட பாஜக நிர்வாகிகள் அண்மையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் அளித்த மனு: தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான வணிகர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தருமபுரி மாவட்டம், மொரப்பூரில் உள்ள ரயில் நிலையம் மூலம் அருகாமையிலுள்ள மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர். இப் பயணிகளின் நலன் கருதி, மொரப்பூர் மார்க்கமாக செல்லும் சென்னை-திருவனந்தபுரம் மற்றும் மும்பை-கன்னியாகுமரி ஆகிய இரு ரயில்களும் மொரப்பூர் ரயில் நிலையத்தில் இரு மார்க்கத்திலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இக்கோரிக்கை தொடர்பாக, பாஜக மாநிலத் தலைமை வழியாக மத்திய ரயில்வே அமைச்சகத்துக்கும் அண்மையில் மனு அனுப்பியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com