எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிராக போராடிய முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபுவைக் கைது செய்த செங்கம் டிஎஸ்பி மீது நடவடிக்கை கோரி ஊத்தங்கரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டச் செயலாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.கோவிந்தசாமி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எத்திராஜ், அண்ணாமலை, பாஞ்சாலைராஜன், தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.