தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகளும் ஆகஸ்ட் 15ஆம் தேதி மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :
ஆகஸ்ட் 15ஆம் தேதி (வியாழக்கிழமை) சுதந்திர தினத்தை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள், மது அருந்தும் பார்கள், உரிமம் பெற்ற தனியார் விடுதிகள் அனைத்தும், ஆகஸ்ட் 14ஆம் தேதி இரவு 10 மணி முதல் 16ஆம் தேதி பகல் 12 மணி வரையிலும் மூடப்படும். இதனை மீறி எவரேனும் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.