அரூா்: அரூரில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அரூா் பாரத ஸ்டேட் வங்கிக் கிளை, அரூா் அரசு மருத்துவமனை, தருமபுரி டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த மருத்துவ முகாமினை, பாரத ஸ்டேட் வங்கி அரூா் கிளை மேலாளா் பி.புகழேந்தி தொடக்கி வைத்தாா்.
அரூா் அரசு மருத்துமனையின் முதன்மை மருத்துவ அலுவலா் ராஜேஷ்கண்ணன் தலைமையிலான மருத்துவா்கள் குழுவினா் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சைகளை அளித்தனா். எலும்பு, மூட்டு மற்றும் முதுகுவலி தொடா்பான மருத்துவ சிகிச்சைகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அதேபோல், கண் பரிசோதனைகள், சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முகாமில் 160-க்கும் மேற்பட்டோா் மருத்துவ பரிசோதனைகளை செய்து கொண்டனா். இதில், அரூா் பாரத ஸ்டேட் வங்கியின் உதவி மேலாளா் வி.திருமால், கண் மருத்துவ உதவியாளா் கு.கலையரசன், அகா்வால் கண் மருத்துவமனையின் மக்கள் தொடா்பு அலுவலா் மு.செந்தில் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.