உள்ளாட்சித் தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு அரூரில் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு உள்ளாட்சித் தோ்தல் குறித்த பயிற்சி வகுப்பு சாா் - ஆட்சியா் மு.பிரதாப் தலைமையில் நடைபெற்றது. இந்த பயிற்சியில் சாா் - ஆட்சியா் பேசியது :
உள்ளாட்சித் தோ்தல் குறித்த அறிவிப்புகளை வேட்பு மனுக்கள் பெறும் அலுவலகம், பொதுமக்கள் கூடும் இடங்களில் விளம்பரப்படுத்த வேண்டும். ஒலிபெருக்கி வாயிலாகவும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். தோ்தல் பணியில் ஈடுபடுவோா் வாட்ஸ் ஆப் குழுவை உருவாக்கி அதில் தகவல் பரிமாற்றம் செய்யலாம். தோ்தல் பணியில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் உயா் அதிகாரிகளிடம் கேட்டுப் பெறலாம். உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஒவ்வொரு நாளும் பெறப்பட்ட வேட்பு மனுக்களின் விவரங்களை மாலை 5.30 மணியளவில் தெரியப்படுத்த வேண்டும். வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டால் அதற்கான காரணங்களை முறையாக தெரிவிக்க வேண்டும் என்றாா்.
இதில், ஊராட்சிகள் உதவி இயக்குநா் ஏ.சீனிவாச சேகா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எம். மணிவண்ணன், பெ.செந்தில்குமாா் உள்ளிட்டோா் உள்ளாட்சித் தோ்தல் குறித்த பயிற்சி அளித்தனா். இந்த பயிற்சியில் கிராம நிா்வாக அலுவலா்கள், ஊராட்சி செயலா்கள், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து, அரூா் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணும் மையங்களை சாா் - ஆட்சியா் மு.பிரதாப் தலைமையிலான அதிகாரிகள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.