தருமபுரி அருகே அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் நிபந்தனை கையெழுத்திட வந்த காட்சியை டிக் டாக் செயலியில் வீடியோ பதிவேற்றம் செய்த, மூன்று சிறுவர்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் உள்பட மூவர் வேறு வழக்கில் நிபந்தனை கையெழுத்திட காவல் நிலையத்திற்குள் வருவதையும் பின்பு, வெளியே செல்வதையும் வீடியோ பதிவு செய்து, அவற்றை டிக் டாக் செயலியில் பதிவேற்றம் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய அதியமான்கோட்டை போலீஸார், அவர்கள் மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.