அரூரில் முன்னாள் எம்எல்ஏ எச்.ஜி. ஆறுமுகம் வீட்டில் நகை, பணம் திருட்டுப் போனது குறித்து போலீஸார் சனிக்கிழமை விசாரணை செய்தனர்.
அரூர் திரு.வி.க. நகரைச் சேர்ந்தவர் முன்னாள் எம்எல்ஏ எச்.ஜி. ஆறுமுகம். இவர், தமது குடும்பத்தினருடன் திருப்பதி கோயிலுக்குச் சென்றுள்ளார். பிறகு சனிக்கிழமை விடியற்காலை 4.30 மணியளவில், வீட்டுக்கு வந்தபோது, அவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகைகள், ரூ. 42 ஆயிரம் பணம் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான தனிப்படை போலீஸார் திருட்டு சம்பவம் குறித்து திரு.வி.க நகர் பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் சேதமடைந்த பீரோ மற்றும் கதவுகளில் தடய அறிவியல் துறையினர் ஆய்வு செய்தனர். மேலும், சம்பவ இடத்தில் மோப்பநாய் பைரவா உதவியுடன் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்து அரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.